முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குருபெயர்ச்சி பலன்கள் 2018

இந்த வருடம் அக்டோபர் மாதம் வரப்போகும் குருப்பெயர்ச்சி யார் யாருக்கு நன்மைகளை வழங்கும்   என்பதை அறிந்துகொள்ளமுன்  பொதுவாக குருபெயர்ச்சியின் பலன்கள் எந்த வகையில்  ஒவ்வொரு ராசிக்கு கிடைக்கும் என்று விளக்கம் அளிக்க  உதவும் வகையில் இந்த கட்டுரை எழுதியுள்ளேன்.
             குரு பகவான் எல்லா இராசிக்கும் நன்மையை மட்டும் தான் செய்வாரா? கெடுதலே செய்ய மாட்டாரா? 
             குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை தான் இருக்கும் இராசியிலிருந்து தனக்கு அடுத்த இராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்த ஒரு வருட குருப் பெயர்ச்சிக் காலத்தில் - அந்த முழு வருடமும் - தான் இடம் பெயர்ந்த இராசிக்கு நன்மையை அள்ளித தருவாரா என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழும். அதற்கு விடை நிச்சயமாக இல்லை என்றுதான் ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உங்களின் ஜென்ம ராசியில் இருந்து 2,5,7,9 & 11 ஆகிய இராசிகளில் இருந்தால் நன்மை செய்யும் குருபகவான், பிற இடங்களான 1,3,4,6, 8,10, & 12ல் நன்மைகளை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருகிறார்.
             இப்படி ஒரு வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தொடர்ந்து குருபகவான் தந்தால் அதை மனிதர்களால்  தாங்கிக் கொள்ள முடியுனா? நிச்சயமாக எவராலும் முடியாது. அதாவது ஒரு வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும். அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.
அதற்காகத் தான், இறைவன் அந்த கொடுக்கும் அளவையும் - அதாவது நன்மை, தீமை எதுவானாலும் அதை அளந்து அவரவர் கர்மவினைக்கேற்பத் தரும்படி பார்த்துக் கொண்டார்.
                                  ஒரு வருட இராசிக்கட்டப் பயணத்தில் குருபகவான் ஏறக்குறைய ஐந்தரை மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்தப் பலனும் பாதி அளவில்தான் அது நன்மையோ அல்லது தீமையோ நம்மை வந்தடையும்.
எனவே, பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குருவக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுப காரியங்களைச் செய்துவிட வேண்டும்.
                                 அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப்பெயர்ச்சி நன்மை தரும்.மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய அளவில் நன்மை ஏதும் தராது. இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, குரு இராசிக்கு நல்ல நிலையில் உள்ளார். கோச்சார குரு பார்வை வந்துவிட்டது, அதனால், தாராளமாக திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் செய்யலாம் என வாய்க்கு வந்தபடி பலன் சொல்வார்கள். ஆனால், ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் நம் அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்திருப்போம்.    இதற்கு  சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணமாகும். இதை நாம் புரிந்து கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.
           6 மாதம் சாதகமும், 6 மாதம் பாதகமும் தரக்கூடிய குருப்பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
                                குருப்பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
                                குரு அருள் கொண்ட ஆலயங்களுக்கு சென்று, யாகங்கள், ஹோமங்கள் வேள்விகளுக்குத் தேவையான நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர் மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு முடிந்ததை வாங்கிக் கொடுத்து, தகுந்த சிவாச்சாரியார் மூலம் குருக்கிரக ப்ரீதி செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் குருபகவான் என்றென்றும் உங்களுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது                      ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்.  இரண்டில் கேது!                        ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...

கிரகங்கள் அமர்ந்த இடப்பலன்கள்

சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த ...

ஆலய அமைப்பும் அறிவியலும்

"  ஆலயங்களில் அமைப்புகள்         மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது.  உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.  வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்ற...