ஜோதிடம் என்னும் பெயரில் அறைகுறை ஜோதிடர்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டம் ஜோதிடம் கேட்ப்பவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது வருத்தத்திற்குறியது.
சொல்லில் உண்மை
பெறுவதில் நேர்மை
ஜோதிடம் கேட்பவரின் நிலைமைக்கு உதவுதல் இவையாவும் ஜோதிடரையும் ஜோதிடத்தையும் காப்பாற்றும்.
கேட்பவர் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே குருட்டு ஜோதிடர்கள் நிலைகுறையும்
ஜோதிடஅறிவே இல்லாமல் நல்ல ஜோதிடரை நீங்கள் காண்பதும் இயலாதஒன்று.
உங்கள் ஜாதக பலனை தெறிந்து கொள்ளவிரும்பி நீங்கள் அனுகும் ஜோதிடர் உள்ளபடியே பலன்சொல்லுதல் என்பது உங்கள் செயல்பாட்டில்தான் உள்ளது
ஜோதிடரிடம் உங்களைபற்றிய தகவல்களைமுன்கூட்டியே தெறிவிக்காமல்,அவரிடம் விசாரணை
குடும்பம் வேலை பொருளாதாரம் என வீண் பேச்சையும் குறைத்துக்கொள்வது நல்லது.
ஜாதகத்தை சற்று நன்றாக கணிதம் செய்து பார்வையிடும்வரை உங்கள் எதிர் பார்ப்பை உளறி கொட்டாமல் இருப்பதும் அவசியம்.
எந்த ஒருவரது ஜாதகமும் தணிப்பட்டு பலன்களை வாரிவழங்கிவிடாது என்னும் உண்மையையும் நீங்கள் புறிந்துகொள்வதும் அவசியம்.
உங்கள் குடும்பஉறவுகள் அனைவரது ஜாதகமும் சேர்ந்தே கூட்டாக பலன்களை அனுபவிக்க உதவும். அதிலும்
குடும்ப உறுப்பினர்களில் கடைக்குட்டியின் ஜாதகம் சிறப்பாக பங்காற்றும்.
முடிந்தவறை குடும்ப ஜாதகம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து பலன் சொல்லும் முறையே சிறந்த பலன்காண உதவும்.
மேலும் பிரிகாரம் என பணம் கறக்கும் கூட்டணிக்கு பலிகடா ஆவதால் பிறப்பின் விதியை
மாய்மாலம் செய்து மாற்றம் காண்பதும் நடவாதசெயல் என்று உணர்ந்தால் எதிர்காலம் எப்படி என அறிவது சுலபம்.
உண்மை உறைப்பவன் ஜோதிடன் . காசுக்கு
வாய்ஜாலம் காட்டி பிறர் வாழ்வை கெடுப்பவன்
திருடன்.
வாழ்க வையகம்.
Online astrologer in Chennai, Tamil astrologer online consultation, Top Online Astrologers in Chennai, Best astrologer in Chennai online, Astrology consultation in Chennai
பதிலளிநீக்குOnline astrologer in Chennai